search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ உதவி"

    • குடியரசு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க. சார்பில் ரூ. 52 ஆயிரத்தை கல்வி, மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
    • ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி பராமரிப்புக்கு நிதியாக ரூ. 20 ஆயிரம் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் தேசிய கொடியை ஏற்றி கல்வி மற்றும் மருத்துவ உதவியாக ரூ. 52 ஆயிரம் வழங்கினார்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூர் சாதிக் அலி என்பவருக்கு உயர் கல்வி உதவியாக ரூபாய் 12 ஆயிரம், மதுரை மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகள் பரிந்துரை அடிப்படையில் மதுரையில வசிக்கும் பாத்திமா என்ற பெண்ணிற்கு ரூ. 10 ஆயிரம், கன்னியாகுமரி மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகள் பரிந்துரை அடிப்படையில் விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேருக்கு மருத்துவ உதவியாக ரூ. 10 ஆயிரம், ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி பராமரிப்புக்கு நிதியாக ரூ. 20 ஆயிரம் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க.மாவட்டத் தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ம.ம.க. மாவட்ட துணைச் செயலாளர் ஜாஹிர் பாபு, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுலைமான், வர்த்தக அணி காஜா சுகுபுதீன், மாவட்ட துணை செயலாளர் அப்துல் சாகுல் ஹமீது, தென் மண்டல செயலாளர் அப்துல் வாஜித், சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான்,மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர் தாஜுதீன், த.மு.மு.க நகர் செயலாளர் முகம்மது தமிம், ம.ம.க. நகர் செயலாளர் அப்பாஸ்,நகர் பொருளாளர் மைதீன் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏரியை நவீனப்படுத்தவும், ஏரிக்கரையில் பூங்கா அமைக்கவும்ரூ.1 கோடி யே 93 லட்சத்து 80 ஆயிரம்ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • வயிற்றில் கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனையேரியை சேர்ந்த பெண் ராணிஎன்பவரை பார்வையிட்டு மருத்துவ உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    விழுப்புரம்:

    செஞ்சி திருவண்ணாமலை சாலையில் பி. ஏரி உள்ளது. இதனை நவீனப்படுத்தவும், ஏரிக்கரையில் பூங்கா அமைக்கவும்ரூ.1 கோடி யே 93 லட்சத்து 80 ஆயிரம்ஒதுக்கீடு செய்ய ப்பட்டு அப்பணி தொடங்கு வதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கினார். 

    மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்து றை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் செஞ்சி யூனியன் தலைவர் விஜய குமார், தாசில்தார் நெகருன்னிசா, மாவட்ட விவசாய அணி அஞ்சா ஞ்சேரி கணேசன், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, மாவட்டவழக்கறிஞர் அணி மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் நெடு ஞ்செழியன், பச்சையப்பன், அண்ணாதுரை பேரூராட்சி துணைத்தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி மற்றும் அனைத்துபேரூரா ட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி அரசு மருத்துவமனையில் வயிற்றில் இருந்து 6 கிலோ கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனையேரியை சேர்ந்த பெண் ராணிஎன்பவரை பார்வையிட்டு மருத்துவ உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    ×